ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட 48 கோடியே 95 லட்சம் ரூபாய் கல்விக் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடன் நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாத காரணத்தாலும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் நபர்களை அடையாளம் காண முடியாததாலும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.