மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்துள்ளது. உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் இருப்பில் 9 சதவிகிதம் ஈரானிடம் உள்ளது. அத்துடன் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழியான ஹோர்மஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் விநியோகம் தடைபட்டு விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.