தலைநகர் டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சாகேத் மெட்ரோ பகுதியில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீரால் பொதுமக்களும், வாகனங்களை எடுக்க முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்தனர்.அதோடு கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சாகேத் சாலை, மிண்டோ சாலை உள்ளிட்ட இடங்களில் ஊர்ந்து செல்ல கூட முடியாத அளவு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.