காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். ஆனம்பாக்கம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.