சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திரௌபதி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் 13 வருடங்களுக்குப் பிறகு தேர் திருவிழா மற்றும் தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.