கும்பகர்ணன் போல தூங்கி கொண்டிருக்கும் திமுக அரசை எழுப்ப சத்தம் போட வேண்டியிருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். திமுகவினரை எழுப்பினால் கூட எழுந்திருக்க மறுப்பதாக விமர்சனம் செய்தவர், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஒப்பந்தம் கொடுத்து 10 மாதங்கள் ஆகியும், திமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது என கேள்வி எழுப்பினார்.