மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் பட்டணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.