சனிக்கிழமையையொட்டி பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். சனிக்கிழமை மற்றும் கோடை விடுமுறையையொட்டி சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை நடைபெற பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.