சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்த சிஎஸ்கே அணி வீரர்களை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மும்பை அணியுடன் நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், அடுத்த போட்டி வரும் 25-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. இதற்காக, சிஎஸ்கே அணி வீரர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னையை வந்தடைந்தனர். இதையடுத்து, கேப்டன் தோனி தலைமையிலான வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.