திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து தங்களுடைய அணியை கட்டமைக்காததே சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போன்ற பெரிய அணியில் ஏலத்தின் போது இளம் வீரர்களை எடுக்காதது மிகப்பெரிய தவறு என தெரிவித்தார்.