நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக, கர்நாடகம் மற்றும் கேரளாவில் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.