மோகன்லால் நடிப்பில் மலையாள மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தொடரும் திரைப்படத்தை, வரும் மே 9 ஆம் தேதி தமிழ் மொழியில் வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம், மோகன்லால் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், இதுவரை 120 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து அசத்தியுள்ளது. இப்படம் மலையாளத்தில் நல்ல கவனம் பெற்றதால் தமிழிலும் ரசிகர்களைக் கவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.