புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து காக்கும் ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்ற 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி குறித்து யூகத்தின் அடிப்படையில் தகவல்களை பரப்பக் கூடாது என கேட்டுக் கொண்டார். மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாவும், மிளகு மற்றும் உலர் திராட்சைகளை விவசாயிகள் விற்பனை செய்யும்போது எந்தவிதமான ஜி.எஸ்.டி. வரியும் இல்லை எனவும் கூறினார்.