தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில், இளைஞர் ஒருவர் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், சிறுமியை மீட்க காலதாமதமாக வந்த போலீஸாரை அப்பகுதி மக்கள் தாக்கியதில், ஐந்து காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.முன்னதாக பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அடைத்து வைத்து வீட்டிற்கு மக்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது