பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகையை 25 லட்ச ரூபாயாக உயர்த்தி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் ஐபிஎல் கோப்பையுடன் நடத்திய வெற்றி பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தது. இந்நிலையில், நிவாரணத்தொகையை 25 லட்சமாக உயர்த்தி சித்தராமையா அறிவித்துள்ளார்.