இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதை தடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த கடிதத்தில், இராமேஸ்வரத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 17 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக கவலை தெரிவித்தவர், தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது அந்த சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை அரசிடம் இருந்து உடனடியாக விடுவிக்கவும், வலுவான தூதரக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.