ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் அமையவுள்ள புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில், தைவான் நாட்டை சேர்ந்த ஹோங்ஃபு நிறுவனம் புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளது.