போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமை கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்ற தலைவர்கள் வழியில் உரிமைகளை காப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவில், கூறி இருப்பதாவது:இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு, எல்லைப்போராட்டத் தியாகிகள் நாளில் என் வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன்.போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.இதையும் பாருங்கள் - அரசியல் களத்தை திரும்பி பார்க்க வைத்த முதல்வர் Tweet | CMStalin | CMTweet | TamilNaduCM