சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகள் காரணமாக, அடுத்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக நடந்ததாக கூறப்படுகிறது. நடப்பு சீசனில் சென்னை அணி அனைத்து போட்டிகளிலும் சொதப்பி வருவதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். இதனால் வரும் 30ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.