கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் படுகொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ தாக்கல் செய்த இந்த மனு வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.