நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக ரசிகரால் கட்டப்பட்ட கோயிலில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம் ஆலப்பாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப், சமந்தாவுக்காக கோயில் கட்டி அங்கு அவரது மார்பளவு சிலையை நிறுவினார். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய சந்தீப், ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானமிட்டு சேவை செய்தார்.இது போன்ற பைத்தியங்களை யார்தான் திருத்துவதோ என்று இணையவாசிகள் ஆதங்கப்படுகின்றனர்.