தமிழ்நாடு அரசின் C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் வழங்கப்பட உள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில், லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 11 புள்ளி 67 சதவீத கருணைத் தொகையுடன் சேர்த்து மொத்தம் 20 சதவீதம் ஊதிய தொகை போனசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், போக்குவரத்துக்கழகம், நுகர்பொருள் வாணிபக் கழகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய பணியாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்கப்பட உள்ளது.அதே சமயம், ஒதுக்கக்கூடிய உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 1 புள்ளி 67 சதவீத கருணைத்தொகையுடன் சேர்த்து மொத்தம் 10 சதவீத போனஸ் தொகை வழங்கப்படும்.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரிபவர்களுக்குக்கும் 10 சதவீத போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களுக்கு கருணைத்தொகை அன்றி 8 புள்ளி 33 சதவீத போனஸ் தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.இது தவிர நுகர்பொருள் வாணிபக்கழக தற்காலிக பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்படும்.முதலமைச்சரின் போனஸ் அறிவிப்பின் மூலம், அரசு ஊழியர்கள் குறைந்தபட்சமாக 8 ஆயிரத்து 400 ரூபாயும், அதிகபட்சமாக 16 ஆயிரத்து 800 ரூபாயும் போனஸ்-ஆக பெறுவர்.