நிதிஷ் குமாருக்காக தனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என லாலு பிரசாத் யாதவ்-ன் அழைப்பை ஏற்று, என்டிஏ கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகலாம் என பேசப்பட்ட நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். முதன்முறையாக பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றபோது, தாம் முதல்வராக வேண்டும் என வாஜ்பாய் விரும்பிய நிலையில், எப்படி தம்மால் பாஜகவை விட்டு விலக முடியும் என கேள்வி எழுப்பினார்