பஞ்சாப், ஹரியானா மாநில எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு ஓய்வூதியம், குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டபூர்வ உத்திரவாதம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.