மே மாத கோடை விடுமுறையை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது செல்போனில் டார்ச் லைட் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.