இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் 4 திட்டம் வரும் 19ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து, ஆக்ஸியம் 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. இதில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்ல உள்ளனர்.