நடிகர் சிரஞ்சீவியின் 157-ஆவது படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகுமென கூறப்படுகிறது.