மகராஷ்டிரா மாநிலம், மும்பையில் கட்டுமான பணியின்போது மெட்ரோ பில்லர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செம்பூர் பகுதியில் மெட்ரோ ரயில் தடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கான்கிரீட் பில்லர் அமைப்பதற்காக கட்டப்பட்டுள்ள கம்பி சாரம், திடீரென்று இரவு நேரத்தில் சரிந்தது.