இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அபிஷேக் நாயர், கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார். டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்ததன் எதிரொலியாக, இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கப்பட்டார்.