கர்நாடகாவில் போலீசாரை கத்தியால் தாக்கிய நபரை காலில் சுட்டு பிடித்தனர். பழைய ஹூப்ளி ஆனந்த் நகர் சாலையில் உள்ள மசூதி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், முஸம்மில் என்பவர் சமீரா ஷேக், அவரது சித்தப்பா ஜாவீத் ஷேக் ஆகியோரை கத்தியால் குத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பிடிக்கச் சென்றபோது தாம் வைத்திருந்த கத்தியால் போலீசாரையும் குத்தியுள்ளார்.