கொடைக்கானலில் குதிரை மிரண்டு வேகமாக ஓடியபோது, அதில் சவாரி மேற்கொண்ட 9 வயது சிறுவன் கீழே விழுந்து காயமடைந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியை சேர்ந்த ஜோயல், கோடை விடுமுறையை ஒட்டி குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று, குதிரை சவாரி மேற்கொண்டான். அப்போது, குதிரை திடீரென மிரண்டு தலை தெறிக்க ஓடியது. இதனால் தவறி விழுந்த சிறுவன், சாலையில் உரசியபடி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டான்.