கர்நாடகாவில் சமையல் சிலிண்டர் வெடித்ததில் 9 ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். ஹுப்பள்ளி சாய் நகரில் உள்ள சிவன் கோவிலில் தங்கியிருந்த ஐயப்ப பக்தர்கள் இரவு தூங்கி கொண்டிருந்த போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஒன்பது பேரும் உடனடியாக கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சபரிமலை செல்ல திட்டமிட்டு கோவிலில் தங்கி உணவு சமைத்த பக்தர்கள் சிலிண்டர் வால்வை சரியாக மூடாததால் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.