மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காலை 9.30 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள அவரின், திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.