ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இன்று நடைபெறும் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களின் மீதான வரியை குறைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, கைக்கடிகாரங்கள்,ஷூக்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது பற்றியும் முடிவெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.