நிலச்சரிவு காரணமாக உத்தரகாண்டில் சிக்கித் தவித்த 30 தமிழர்களும் மீட்கப்பட்டனர். முன்னதாக மீட்கப்பட்ட தமிழர்களில் ஒருவரான பராசக்தி என்ற பெண்மணியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அனைவரும் நலமுடன் சொந்த ஊர் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.