வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார் நீதிபதி நந்தினி தேவி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு.பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அடித்து கொடுமைப்படுத்தி வன்கொடுமை செய்த வழக்கில் நீதி 9 பேருக்கும் என்ன தண்டனை என்பது குறித்து சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியாகிறது.9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் - அரசு தரப்பு கோரிக்கை சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு ஆகியோர் குற்றவாளிகள்.ஹெரன்பால், அருளானந்தம், மற்றும் அருண்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு பாலியல் வன்கொடுமை தொடர்பான 376 D, 376 2N என்ற பிரிவுகளில் குற்றம் நிரூபணம்.வழக்கில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகள், நாங்கள் அதிகபட்ச தண்டனை கேட்டிருக்கிறோம் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சித்திரவதை செய்யப்பட்ட காட்சிகளுடன் வெளியான வீடியோக்களால் அதிர்ந்தது தமிழகம்.தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்ததை அடுத்து தீவிரம் அடைந்த வழக்கின் விசாரணை 2020ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து 2019 பிப். 24ல் வழக்குப்பதிவு.முக்கிய ஆதாரங்கள் என்னென்ன? திருநாவுக்கரசின் ஐபோனில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிப்பு வழக்கின் முக்கிய ஆதாரமாகவும் திருப்பமாகவும் மாறிய திருநாவுக்கரசின் ஐஃபோன்.சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப் இந்த வழக்கின் இன்னொரு முக்கிய ஆதாரம் 2019 ஏப்ரல் 25 அன்று இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தீவிரம் அடைந்தது விசாரணை.