உங்களது ஈகோவில் உறுதியாக இருக்கிறீர்களா? என கமல்ஹாசனுக்கு கர்நாடக நீதிமன்ற நீதிபதி கேள்வி.கமலாக இருந்தாலும் யாராக இருந்தாலும் பெரும்பான்மை மக்களின் உணர்வு காயப்படுத்தப்பட்டுள்ளது - நீதிபதி.கன்னட மொழியின் மீதான காதல் காரணமாகவே கமல் அப்படி பேசினார். கர்நாடக பிலிம் சேம்பருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் - ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்.கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கத்திற்கு கமல் எழுதிய கடிதத்தில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை இல்லை, மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிந்துவிடும் - கர்நாடக நீதிமன்ற நீதிபதி.கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை இடம்பெற வேண்டுமென வற்புறுத்த முடியாது. தவறான நோக்கம் இருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும் - ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்.