விஜய் ஒரு நடிகர், அவரை முதலமைச்சருடன் ஒப்பிடாதீர்கள் என மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் காரணங்களுக்கு எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக பழிவாங்குகிறார்கள். நாங்கள் முறையாக விதியை பின்பற்றினோம். கூட்டத்தில் சட்டவிரோதிகள் புகுந்துள்ளனர். கட்சிக்காரர்களை நாங்கள் தடுத்திருக்கலாம், மக்களை போலீஸ் தான் தடுத்திருக்க வேண்டும். ஒருநபர் ஆணைய அறிக்கை வரும் வரை யாரும் கைது செய்யக் கூடாது என வாதிட்டனர். அதற்கு பதிலளித்த நீதிபதி, விஜய் பிரச்சாரத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என எப்படி கூறினீர்கள்? விஜய் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் எப்படி கூறினீர்கள்? சம்பள நாள், வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாள் என்பதால் குறைவான மக்கள் வருவார்கள் என எப்படி கணித்தீர்கள்? உங்கள் கட்சி தலைவரை முதலமைச்சர் அல்லது மற்ற தலைவர்களுடன் ஒப்பிட வேண்டாம். விஜய் நடிகர். அவரை பார்க்க பெண்கள், குழந்தைகள் வருவார்கள். நீங்கள் கேட்ட 3 இடமே பொருத்தமற்றது. அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு தெரியுமா, அவரிடம் சொல்லப்பட்டதா? அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்தும் தவெக நிர்வாகிகள் ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.