சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கான ஒப்புதலை, ஆளுநர் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது. மசோதாக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் தான் உள்ளது என தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம். ஒன்று மசோதாக்கள் மீது ஒப்புதல் அளிக்க வேண்டும், அல்லது திருப்பி அனுப்ப வேண்டும், இல்லை என்றால் நிராகரிக்க வேண்டும் என அறிவுறுத்தல். ஒரு மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும் தான் முதன்மையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு. ஒரு மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது, அரசு தான் மாநிலத்தை முழுமையாக செலுத்தக் கூடிய அதிகார அமைப்பு என்றும் திட்டவட்டம்.