ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ஆயுதங்கள் எதுவும் குவிக்கப்படவில்லை என விமானப்படை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக பொற்கோவில் வளாகத்திற்குள் ட்ரோன் தடுப்பு துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாகவும், அதற்கு பொற்கோவில் நிர்வாகமும் அனுமதி அளித்ததாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது.