எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், முப்படைகளையும் இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடி காரணமாக பாகிஸ்தான் கோபத்தில் உள்ளது. இதனால் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அத்துமீறி ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்திய மத்திய அரசு, நீர், நிலம், ஆகாயம் என எந்த வகையில் தாக்குதல் நடத்தினாலும், அதனை எதிர்கொள்ளூம் வகையில் போர் விமானங்கள், போர் கப்பல்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஆயத்தமாக இருக்க உத்தரவிட்டுள்ளது.