கர்னல் சோபியா குரேஷி குறித்த தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு, மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா மீண்டும் மன்னிப்புக் கோரியுள்ளார். தாம் பேசிய வார்த்தைகள் சமூகம், மதம் மற்றும் நாட்டு மக்களை காயப்படுத்தியுள்ளதாகவும், அது தனது மொழியியல் தவறு என்றும் கூறியுள்ளார். மேலும், எந்தவொரு சாதி, மதம் அல்லது சமூகத்தை புண்படுத்துவது தமது நோக்கமல்ல என தெரிவித்துள்ளார். தாம் கவனக்குறைவாக சொன்ன வார்த்தைகளுக்காக ராணுவத்திடமும், கர்னல் சோபியாவிடமும், நாட்டு மக்களிடமும் மீண்டும் ஒருமுறை கைகூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.