சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் சிவப்பு பயங்கரவாதத்தின் கோட்டையில் மூவர்ணக்கொடி பறப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், கரேகுட்டா மலையில் ஒரு காலத்தில் சிவப்பு பயங்கரவாதம் கோலோச்சியதாகவும், 21 நாட்களுக்குள் 31 மாவோயிஸ்டுகளை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது அந்த மலையில் மூவர்ணக் கொடி பறப்பது பெருமையளிப்பதாகவும், வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் மாவோயிஸத்தை அழிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, இந்த ஆபரேஷனில் எந்த வீரருக்கும் பாதிப்பில்லாதது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தாங்கள் திட்டமிட்டதை விட மிக அதிகமாகவே செய்து முடித்துள்ளதாகவும் கூறினார்.