இந்திய விமான நிலையங்களில் துருக்கி நிறுவனத்துக்கான பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் துருக்கியின் ஸெலெபி ஏவியேஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கண்டித்ததுடன், பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்பட்டதால், அந்நாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை மத்திய அரசு ரத்து செய்தது.