மகாராஷ்டிரா மாநிலம் மும்பை - கோவா நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல சுற்றுலா பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராய்காட் மாவட்டம் கர்னாலா பகுதியில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் கிரேன் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.