முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒரே அமர்வாக நடத்த வேண்டும் என தாக்கலான மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான நீட் பி.ஜி தேர்வுகளை இரண்டு அமர்வுகளாக நடத்த தேசிய தேர்வு குழும ம் திட்டமிட்டுள்ளது. இப்படி நடத்துவது தேர்வின் வெளிப்படைத் தன்மையை பாதிக்கும் என ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி BR கவாய் தலைமையிலான அமர்வு, மனுவை அடுத்த வாரம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. நீட் பிஜி தேர்வை இரண்டு அமர்வுகளாக நடத்தினால், கடினமான கேள்விகளை எதிர்கொள்வதிலும், விடைகளை திருத்துவதில் சம மான வழிமுறைகளை பின்பற்றுவதிலும் சிர ம ம் ஏற்படும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.