பெங்களூருவில் ஆர்சிபி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மகனின் கல்லறை மீது படுத்துக்கொண்டு தந்தை கதறி அழுதக் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4ம் தேதி சின்னசாமி மைதானதில் நடைபெற்ற நிகழ்சியை பார்ப்பதற்காக அதிகப்படியான மக்கள் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இதில் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பூமிக் லட்சுமணன் உயிரிழந்த நிலையில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தனது மகனின் கல்லறையை விட்டு வெளியேற மறுத்த அவரது தந்தை, தான் இங்கேயே இருக்க விரும்புவதாக கூறி தரையில் படுத்துக் கொண்டு கதறி அழுதார்.