உத்தரப்பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் குடியிருப்பாளர்களுக்கும், பாதுகாப்பு காவலர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் நுழைந்த காரில் வளாகத்தின் எண்ட்ரி ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருந்ததால் பாதுகாப்பு காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பாளர்கள் காரிலிருந்து இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதில், இரு தரப்பினர் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் கலவரம் ஏற்பட்டது.