இஸ்ரோ தனது 101-ஆவது ராக்கெட்டை ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தவுள்ளது. புவி கண்காணிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக வடிவமைத்துள்ள இஓஎஸ்-09 எனும் அதிநவீன செயற்கைக்கோள், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி61 ராக்கெட் மூலம் அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.