மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள 13 வெவ்வேறு இடங்களில் கடந்த இரு நாட்களாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் போது, 9 கோடியே 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 23 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் பதித்த தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் மற்றும் ஏராளமான குற்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.